சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காமராஜர் முப்பெரும் விழா

14/07/2024,சிவகங்கை

122 வது காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் மாவட்ட தலைவர் திரு அருளானந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், என அனைவரும் ஒருங்கிணைந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் வழி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கியும்,ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு உபயோகப் பொருட்கள் வழங்கியும்
பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கும் விழாவாக முப்பெரும் விழா நடைபெற்றது.

முப்பெரும் விழா மாநில பொதுச்செயலாளர் திரு பா குமரய்யா அவர்கள் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மாநில பொது செயலாளர் அவர்கள் திரு குமரய்யா அவர்கள் காமராஜர் மக்கள் கட்சியின் வண்ணக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களுக்கு குமரய்யா மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு மாவட்ட தலைவர் திரு அருளானந்த் அவர்கள் தலைமையில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுமார் 160 பயனாளிகள் தேர்வு செய்து பயனாளிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வழியில் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் ஆலோசனைப் பெயரில் மாவட்ட நிர்வாகம் திரு.அருளானந்த் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது.

விழாவின் இறுதியாக சிறப்பு விருந்தினர்களும் மாநில செயலாளர் அவர்களும் சிறப்புரையாற்றினர்.


நிகழ்ச்சி நிறைவாக சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் அனைவருக்கும் சைவ உணவு வழங்கப்பட்டு முறையாக பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி நிறைவாக தேசிய கீதம் பாடல் பாடப் பெற்று விழா நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *