கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார். கன்னட அமைப்புகளைக் கண்டித்துப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
20/06/2025
நடிகர் கமல்ஹாசனை ‘தக் லைஃப்’ பட கம மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. அதே நேரம் படத்தை கர்நாடகாவில் வெளியிட தேவையான பாதுகாப்பை அம்மாநில அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார். கன்னட அமைப்புகளைக் கண்டித்துப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.”யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கன்னட அமைப்புகள் அமைதி காக்க வேண்டும். பெங்களூரு நகரம் அனைத்து சாதி, மொழி மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ள நகரம். அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. பெங்களூரு ஒரு சர்வதேச நகரம், கர்நாடக மாநிலம் எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலம், கர்நாடக மக்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என்று தேன் சொட்டும் வார்த்தைகளில் அவர் பேசியிருப்பது அனைத்து தரப்பினரையும் குறிப்பாக தமிழக மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
