இன்னும் எத்தனை காலம் தான்…
“விழி போல எண்ணி, நம் மொழி காக்க வேண்டும்” என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், குடும்ப நிறுவனங்களின் பெயர்களில் கூடத் தமிழ் இல்லை.
குடும்பத்தினரும், கழகத்தவரும் நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை இல்லை.
தமிழை, தங்லீஷ் ஆகப் பேச மட்டுமே தெரிந்த ஒரு தலைமுறை உருவாகக் காரணமாய் இருந்துவிட்டு,
“வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று முழக்கமிட்டுக் கொண்டு, “இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவர்?”
பா குமரய்யா,
மாநில பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி