மதுரை பொதுக்குழு விழாவில் கட்சியின் பொருளாளர் திரு.பொன்.கோவிந்தராஜ் அவர்கள் எழுச்சி உரை

மதுரையில் 16/07/2023 நடைபெற்ற விழாவில் காமராஜர் மக்கள் கட்சியின் பொருளாளர் திரு.பொன்.கோவிந்தராஜ் காமராஜர் ஆட்சியின் சிறப்புகளை மலர் வெளியீட்டு விழா புத்தகம் ஒவ்வொரு மாணவர் கையிலும் இடம்பெற வேண்டும் எனவும்,பள்ளி ,கல்லூரிகள் என அனைத்து மாணவர்களும் காமராஜரின் பொற்கால ஆட்சியை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு ” என திருக்குறளை பதிவு செய்து கட்சிக்கு நிதி ஆதாரம் முக்கியம் , கட்சியின் வளர்ச்சிக்கு தொண்டர்கள் தங்களால் முடிந்த நிதியை கட்சிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வருகின்ற காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *