வடகோவையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியினர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளான 15-07-2023 இன்று மாநகர் மாவட்ட தலைவர் நெடுமாறன் தலைமையில், புறநகர் மாவட்ட தலைவர் துறைச்சந்திரன் முன்னிலையில் வடகோவையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள் , மாநில நிர்வாகிகள், மகளிர் அணியினர் , இளைஞர் அணியினர் , அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். அதைத்தொடர்ந்து அனைவரும் காமராஜரின் சாதனையை சொல்லி காமராஜர் வாழ்க.. காமராஜர் புகழ் ஓங்குக என்றும் எங்கள் மூச்சு காமராஜர் ஆட்சி என்றும் கோஷமிட்டனர்.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் நந்தகோபால், மாநில மகளிர் அணி தலைவர் வள்ளி ரமேஷ் , மண்டல மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் கீதா , மாநில பொறியாளர் அணி தலைவர் வரதராஜன் , மாநில கலை இலக்கியப் பிரிவு செயலாளர் மகேந்திரன் , முன்னாள் மாவட்ட தலைவர் திருமலை ராஜன் , சிங்காநல்லூர் தொகுதி தலைவர் கருணாநிதி , துணைத் தலைவர் தனபால் , கோவை தெற்கு தொகுதி தலைவர் பாலகணேஷ் , கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் முருகேசன் , செயலாளர் தாமரைச்செல்வன் மகளிர் அணி தலைவர் வீரலட்சுமி , சமூக ஆர்வலரும் உறுப்பினருமான கவுண்டம்பாளையம் சித்ரா அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

இடம் : வடகோவை,கோயம்புத்தூர் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *