சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக 77 சுதந்திர தின விழா. பொதுமக்களுக்கு 250 பேருக்கு இலவச மரக்கன்றுகள்

Aug 15 /2023 : சிவகங்கை

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக 250 பேருக்கு இலவச மரக்கன்றுகள் தேசியக்கொடி மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்குதல், மூன்றாம் கட்டமாக சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், வலியுறுத்தியும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பாடு பட்ட தியாகிகளுக்கு நினைவை போற்றும் விதமாகவும், சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக, 250 மேற்பட்ட மக்களுக்கு இலவச மரக்கன்றுகள், தேசியக்கொடி, இனிப்பு, வழங்குதல், விழா காரைக்குடியில் 100 அடி சாலை இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அருளானந்து தலைமையில் நடந்தது,

முன்னிலை வகித்தோர் மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட மகளிர் அணி, ஆனந்தி முத்துக்குமார், தென்மண்டல இளைஞர் அணி, துணைச் செயலாளர் அலெக்ஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி செயலாளர் நந்தகுமார், ராஜா முகமது, கண்ணன், வெங்கட் காரைக்குடி நகரத் துணைத் தலைவர் முத்துக்குமார், திருப்பத்தூர் தொகுதி தலைவர் முருகானந்தம், காரைக்குடி தொகுதி இளைஞரணி துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி மாரியப்பன், மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி தகவல் தொழில்நுட்ப அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *