காரைக்காலில் சண்டே மார்கெட் நிலைகுறித்து காமராஜர் மக்கள் கட்சி கண்டனம்

காரைக்கால் நகர பகுதியின் மத்தியில் இருக்கும் தற்காலிக “நேரு மார்கெட்” பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து தெருநாய் மற்றும் விஷஜந்துகள் கூடாரமாக விளங்குகிறது, காரைநகராட்சி அந்த இடத்தை சுத்தம் செய்து சண்டே மார்கெட் துவங்கினால் வீட்டுப்பொருட்கள் முதல் நவநாகரீக ஆடைகள், பழைய புதிய புத்தகம், எலக்ட்ரானிக் பொருள்கள், பழைய புதிய சாமான்களை குறைந்த விலையில் மக்கள் வாங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கும்.

சிறு வணிகர்களின் உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கும், மகளிர் வீடுகளில் தயார் செய்யூம் கைவினை பொருள்களை நியாமான விலையில் விற்பனை செய்வதற்கு சிறந்த இடமாகவும் இருக்கும், காரைநகராட்சிக்கு பெரும் வருமானமும் கிடைக்கும் மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி சண்டேமார்கெட் துவங்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *