காரைக்காலில் குளம் நீர் முழுவதும் கழிவுநீராகவே உள்ளது

“நம் நீர் நாயகன்” A.விக்ராந்த் ராஜா IAS அவர்களால் தூர் வாராப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட குளங்களில் இதுவும் ஒன்று.முருகராம் நகர் அருகில் உள்ளது புதுக்குளம். ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாசலில் உள்ள கழிவுநீர் வடிக்கால்வாய் சுத்தம் செய்யாமல் அடைப்பட்டு அப்பகுதி கழிவுநீர் முழுவதும் குளத்திற்கு செல்கிறது. குளம் நீர் முழுவதும் கழிவுநீராகவே உள்ளது.

காரைக்காலில் கொசு உற்பத்தி செய்வதில் முக்கிய இடமாக உள்ளது.டெங்குவை ஒழிப்போம் மலேரியாவை ஒழிப்போம் என பள்ளி மாணவிகளை வைத்து கோஷம் போடும் அதிகாரிகள் இது போன்ற இடங்களை நேரில் சென்று கவனித்து அதை சுத்தம் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.குளத்தை சுற்றி குடியிருப்பவர்களுக்கும்,அதன் அருகில் உள்ள முருகராம் நகர், இலாஹி நகர் குடியிருப்புவாசிகளுக்கும் சுகாதார துறை மூலம் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *