தமிழக வனத்துறைக்கு, வனவிலங்குகளை உயிரினங்களை பாதுகாக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
17/03/2025
தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களுக்கும் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக பொதுநல மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கு, நீர் நிலைகளை ஏற்படுத்தி தரவும், வெப்பம் அதிகமாக உள்ள சூழ்நிலையில், வனவிலங்குகள் ஊருக்கு வருவதை தடுக்க, வன குடிநீர் தொட்டி அமைத்து தரவும், விலங்குகள் ஏதுவாக வழிவகை, செய்ய தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு Other Petitions – Social Forestry (TN/ENVFOR/ARI/P/PORTAL/17MAR25/11287698) கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வனத்துறை அதிகாரிகள் , காமராஜர் மக்கள் கட்சிக்கு , மாவட்ட தலைவர்களுக்கு பதில் கொடுத்துள்ளனர்.
அந்த பதில் மனுவில் காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது எனவும், வனவிலங்குகளுக்கு உரிய பாதுகாப்பும், நீர் நிலை தொட்டிகளை நீர்களை நிரப்பி வன விலங்குகளுக்கு பயனுள்ள வகையில் பணிகளை செய்ய முற்படுவதாக பதில் கொடுத்துள்ளனர்.
சாட்சியாக அரியலூர் மாவட்ட வன அலுவலர் அறிக்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
