காரைக்கால் பகுதி சாலைகளில் தொடரும் விபத்துக்களை தடுக்க கோரிக்கை வைக்கிறது காமராஜர் மக்கள் கட்சி
11/05/2025
காரைக்காலில் சாலையில் பல்வேறு விபத்துகளை பயணிகள் சந்தித்து வருகின்றனர் . ஓர் ஆண்டு காலத்திற்கு பிறகு காமராஜர் சாலை இரயில்வே கிராஸிங் பகுதி தார்சாலை போடப்பட்டது. அங்கு வள்ளலார் நகர், ராஜாத்தி நகர் சாலைகளை இணைக்கும் பகுதி செங்குத்தாக உள்ளது. அதனால் நேற்று வள்ளலால் நகரிலிருந்து வந்த வாகனம் விபத்தை சந்திக்க நேரிட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

ராஜாத்தி நகரில் உள்ள மகப்பேறு மருத்துவரை சந்திக்க தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள் வருகிறார்கள் வாகனங்களில் அச்சாலையை கடப்பவர்கள் மரண பயத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அச்சாலைகளை சமச்சீர் செய்ய காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் சிங்கார வேலவர் சாலை, இரயில்வே கிராஸிங் சாலை ஓரத்தில் பல இடங்களில் பாதுகாப்பு சுவர் இல்லாமல் உள்ளது.
இங்கு அடிக்கடி சோதனை ஓட்டம் நடைபெறும் போது முழு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பாதுகாப்பு சுவர் இல்லாத பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு அப்பகுதியில் உடன் பாதுகாப்பு சுவர் எழுப்ப காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
