செயற்கை நிழல் கூடங்களுக்கு பதிலாக இயற்கை வளத்தை காக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
6/05/2025
காரைக்காலில் இரவு வீசிய சூறாவளி காற்றில் காத்தப்பிள்ளை கோடி, இரயில் நிலையம் அருகில் இரும்பு குழாயில் அமைக்கப்பட்டிருந்த பசுமை பந்தல்கள் சரிந்து விழுந்தது.


அதைப்போல் தனியார் நிறுவனங்கள் அமைத்திருந்த பசுமை பந்தல்களும் சூறாவளி காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாழாய் போனது. பெரும்பாலான மரக்கிளைகளும், கடைகளின் பெயர் பலகைகளும் முறிந்து விழுந்தது. பல டிரான்ஸ்போர்மர்ஸ் பழுதாகி போனது.

அதனால் பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் நாசமாக போனது திடீரென வீசிய சூறாவளி காற்றால் பெருபாலான மக்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் இயற்கை சீற்றத்தால் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்கள் நடுவதால் செயற்கை நிழல் கூடங்கள் அமைவது தவிர்க்கப்படும் எனவும், காரைக்கால் நிர்வாகம் தயை கூர்ந்து மரக்கன்றுகளை வரும் காலங்களில் வளர்த்து மக்களுக்கு நிழல் தரும் வரை வகையிலும் பாதிப்பில்லாத வகையில் சாலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது.

