தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பயணிக்கும் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தனியார் பள்ளி பேருந்துகளை முறையான சோதனைக்குட்பட்டு பயன்படுத்த வலியுறுத்தியும்-காமராஜர் மக்கள் கட்சி
26/05/2026
தமிழகத்தில் ( 38 மாவட்டங்கள் )அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நீண்ட கால விடுமுறை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி மாணவ மாணவியர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர் தனியார் பள்ளி வாகனங்களில் கட்டணம் செலுத்தி பள்ளிகளுக்கு செல்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்கள் செல்லும் பேருந்து இருக்கைகள் உறுதித் தன்மை வாய்ந்ததாகவும், சரியான இருக்கைகள் மற்றும் அவசர காலக் கதவு ( Emergency Door ) முறையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்தும்,
2025-2026 கல்வி ஆண்டில் மாணவர்கள் எந்த ஆபத்தில் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் (மாவட்ட ஆட்சித் தலைவர்) , பள்ளி முதன்மை கல்வி அலுவலர், RDO- போக்குவரத்து துறை அவர்களையும், தனியார் பள்ளி பேருந்துகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு பேருந்துகளை முறையாக ஆய்வு செய்து பயன்படுத்த வேண்டுமென தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்ட ஆட்சியர்களுக்கும் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக Policy Matters – SCHOOL (TN/SCHOOL/TKS/P/PORTAL/26MAY25/11782761) மனு கொடுக்கப்பட்டது.

காட்சிப்படுத்துதல் – தென்காசி மாவட்டம்
