அரசு சேவை இல்லங்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும்
24/06/2025
அரசு சேவை இல்லத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இத்தகைய காப்பகங்களில் குழந்தைகள். பெண்களின் பாதுகாப்பு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஏழை எளியவர்கள் அரசை மட்டுமே நம்பி அடைக்கலம் தேடும் இடங்களில், குற்றங்கள் அச்சமின்றி அரங்கேறும் சூழல் நிலவுவதைத் தமிழக அரசு ஓர் இழிவாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
