காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மக்கள் நலன் கருதி உணவுக்கூடங்களை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு

05/06/2025

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரம் (மற்றும்) திருச்செங்கோடு புறநகர் பகுதியில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் உணவு பரிமாறப்படும்பொழுது,  ரசாயனம் கலந்த அச்சு காகிதத் தாளில்( Newspaper ) மீன் சில்லி, காலிஃப்ளவர் சில்லி, அப்பளம் மற்றும் எண்ணெய் உணவுப் பொருட்கள் அனைத்தும் பெருமளவில் ரசாயனம் கலந்த அச்சு காகிதங்களில் ( Newspaper )  நுகர்வோருக்கு, பொது மக்களுக்கு உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படுகிறது.

இந்த புகார்கள் குறித்து தொடர்ந்து திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் மாவட்ட உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் திருச்செங்கோடு நகர மற்றும் புறநகர மக்கள் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மக்களின் நலனின் கருத்தில் கொண்டும், உற்பத்தியாளர்களின் செயல்பாட்டை கருத்தில் கொண்டும் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் வாழை இலையில் எண்ணெய் பொருட்கள் பயன்படுத்த உற்பத்தியாளர்களுக்கும், சாலையோர கடை உரிமையாளர்களுக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் உணவு உண்ணும் பொழுது நச்சு கலந்த  ரசாயனம் கலந்த அச்சு காகிதத் தாளில்( Newspaper ) உணவு உண்ணாமல் பாதுகாக்கப்பட்ட உணவை உட்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு Food Quality – Drug Admin (TN/HEALTH/NMK/P/PORTAL/05JUN25/11902459) கொடுத்துள்ளது .

அதன் விளைவாக நடவடிக்கை எடுப்பதாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாவட்ட உணவு வழங்கல் துறை பதில் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *