காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
20/06/2025
நமது கட்சியின் மூத்த உறுப்பினரும் திருப்பூர் மாவட்ட தலைவருமான அண்ணன் திரு கருப்புசாமி உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் . அண்ணன் திரு கருப்புசாமி மருத்துவ சிகிச்சைக்கு திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகம் உடல் ஆரோக்கியம் பெற பல்வேறு உதவி முயற்சிகளை முன்னெடுத்தது.
அண்ணன் திரு கருப்புசாமி அவர்களை நமது கட்சியின் மதுரை திருப்பூர், கோவை ,நீலகிரி நிர்வாகிகள் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்து, நமது ஐயா தமிழருவி மணியன் அவர்கள் ஆசியுடன் மருத்துவ செலவிற்காக ( Rs.2,00,000 )ரூபாய் இரண்டு லட்சத்திற்கான காசோலையை ,அண்ணன் திரு கருப்புசாமி அவர்களிடம் கொடுக்கப்பட்டது .

நிதி பங்களிப்பு செய்த அனைத்து காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்