காரைக்கால் பொதுப்பணி துறை சாலையை செப்பனிட காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
15/06/2025
திருமலைராஜனாறு பாலம் சந்திப்பிலிருந்து பி.பி.சி.எல் வரையிலான 3கி.மீ தூரமுள்ள திரு-பட்டினம் கிழக்கு புறவழிச்சாலயை கடந்த ஆண்டு 5கோடியே 63இலட்சத்து 71ஆயிரம் ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு சாலையை மேம்படுத்தும் பணியை பொதுப்பணித்துறையால் செய்து முடிக்கப்பட்டது.
இந்த ஓராண்டு காலத்திலேயே ஆங்காங்கே சிறுசிறு பள்ளங்கள். தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்லும் சாலையாக இருப்பதால் சிறு -பெரு பள்ளங்கள். அதனால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது பொதுப்பணி துறை அப்பகுதி சாலையை செப்பனிட காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
