தன்னுடைய கவிதைகளாலும், திரைப் பாடல் களாலும் உணர்வாய் வாழ்பவர் கண்ணதாசன்’ என தமிழருவி மணியன் புகழாரம்
16/05/2025,நாமக்கல்
தன்னுடைய கவிதைகளாலும், திரைப் பாடல் களாலும் உணர்வாய் வாழ்பவர் கண்ணதாசன்’ என தமிழருவி மணியன் புகழாரம் சூட்டினார்.நாமக்கல்லில் கவியரசு கண்ண தாசன் கவிதைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கம்பன் கழகத்தலைவர் பசுமை வ. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பேராசிரியர் அரசு பரமேசுவரன் அறிமுக உரையாற்றினார். மருத்துவர் இரா.செழியன், நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா. குழந்தைவேல் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். விழாவில், ‘கவியரசு கண்ணதாசன் விருதை தமிழருவி மணியனுக்கு வழங்கி ‘தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து, கண்ணதாசனின் பன்முகப் பரிமாணங்கள் என்ற தலைப்பில் தமிழருவிமணியன் பேசியதாவது:
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் கவிதைத் திருவிழாவில், தமிழருவி மணியனுக்கு கவியரசு கண்ணதாசன் விருதை வழங்குகிறார் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன். உடன், நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ. சத்தியமூர்த்தி, தமிழ்ச்சங்கத் தலைவர் இரா. குழந்தைவேல், மருத்துவர் இரா. செழியன், பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், பூங்கோதை, திருமதி, நிர்மலா, விஸ்வநாதன் உள்ளிட்டோர்.காமராஜரின் தொண்டனான எனக்கு கண்ணதாசன் கவிதை வரி கள் மூலமே காமராஜரை பற்றியபுரிதல் கிடைத்தது. கண்ணதாசன் குறித்து காமராஜரிடம் பழகித் தெரிந்துகொண்டேன். 1948-இல்அவரது எழுத்துப் பணி தொடங் கியது. 1977-ஆம் ஆண்டு வரை கவிதை அரசியல், திரைப் பாடல்கள் எனப் பன்முக திறமையைக் காட்டினார்.
நேரு, இந்திரா, காமராஜரைப் பற்றி அவர் தனது எழுத்துகளால் மனம் உருகி கவிதை வடித்துள் ளார். 1977 முதல் 1981 வரை அவ ருடைய பாதை ஞானம் தேடிய பாதையாகவே சென்றது. வாழ் வியல் சூழல் கருதி அவர் எழுதிய திரைப்படப் பாடல்கள் என்றும் நினைவில் நீக்கமற நிறைந்திருக்கும்.தங்கப் பதக்கம். கௌரவம், வியட்நாம் வீடு போன்ற திரைப் படங்களில் இடம்பெற்ற பாடல் களைக் கேட்டால், பிரிந்த தம்ப தியரும் 6.இணைவர் இணைவர். 5,000 பாடல் களை எழுதியுள்ள கண்ணதாசன், திரைப் பாடல்களாலும், கவிதைக ளாலும் வாழ்கிறார். இந்த உலகில் அவருடைய இடத்தை வேறு எவ ராலும் நிரப்ப முடியாது என்றார்.விழாவில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பீ.ஏ. சித்திக், பூங்கோதை, நிர்மலா, திருமதி விஸ்வநாதன் மற்றும் கண்ணதா சன் ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
