தமிழருவி மணியன் எழுதிய தொகுப்புதான் ‘காலத்தை வென்ற கண்ணதாசன்
16/06/2025
கவியரசு கண்ணதாசன் கவிதைத்திருவிழாவில் கடந்த 15/06/2025 ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டேன். இந்த ஆண்டு கவியரசு கண்ணதாசன் விருது பெற்றவர் தமிழருவி மணியன். பேராசிரியர் அரசு பரமேஸ்வரன்ஒருங்கிணைத்திருந்த அந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ.சத்திய மூர்த்தி, நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.குழந்தைவேல், என் இனிய நண்பர் மருத்துவர் செழியன் உள்ளிட்டோர் முன்னிலையில் தமிழருவி மணியனுக்கு விருது வழங்கும் பேறு எனக்கு கிட்டியது.
கவியரசு கண்ணதாசன் குறித்து நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்து விட்டன. ஆயிரக் கணக்கான மேடைகளில் உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான செய்திகள் கேள்வி ஞானத்தின் அடிப்படையானவை .
காலத்தை வென்ற கண்ணதாசன்
தமிழருவி மணியன் எழுதிய தொகுப்புதான் ‘காலத்தை வென்ற கண்ணதாசன். நாமக்கல்லிலிருந்து திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை என்று பயணித்த போது ‘காலத்தை வென்ற கண்ண தாசன்’ கட்டுரைகளை மட்டுமல்ல பாடல்களையும், கேட்டு ரசித்தேன்.
