நாள் ஒன்றுக்கு 10முறைக்கு மேல் காரைக்காலை சுற்றி ரயில் கேட் மூடுவதால் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை தேவை

20/06/2025

புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்விழா இவ்வாண்டு ஜூலை 8ந்தேதி துவங்குகிறது. இவ்விழாவில் மிக முக்கிய நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் கலந்து கொள்வது “பரமசிவன் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதியுலா வருவது இந்நிகழ்ச்சி காலை 9மணிக்கு தொடங்கும்.
இந்நாளில் கிராமங்களிலிருந்தும்,அண்டை மாநிலத்திலிருந்தும் மக்கள் சாரைசாரையாக வருவார்கள்! திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்
அன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் “சரக்கு ரயில் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும், சிரமத்திற்கு ஆளாகுவதுடன், போக்குவரத்து இடையூறும் மிகமிக அதிகமாக இருக்கும். மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரயில்வே நிர்வாக அதிகாரிகளுடன் முன் கூட்டியே பேசி 10-07-25 அன்று ஒருநாள் சரக்கு ரயில் செல்வதை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *