மாவட்ட அரசு சிப்காட் மையத்தை விரிவுபடுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

தமிழக அரசால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிப்காட் தொழிற்சாலை விரிவுபடுத்தும் திட்டம் அமலாக்கப்பட்டு வருகிறது .

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட்டிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விரிவுபடுத்தும் திட்டமும்,இல்லாமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து காமராஜர் மக்கள் கட்சி சார்பாக சிப்காட் தொழிற்சாலை விரிவுபடுத்தவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *