10 மணி நேர வேலைக்கு பச்சைக் கொடி காட்டிய ஆந்திரா
19/06/2025
ஆந்திர மாநிலத்தில் தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைழனஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மணி நேரமாக இருந்த வேலைநேரம் சில ஆண்டுகளுக்கு முன்பு 9 மணி நேரமாக மாற்றப்பட்டது. தற்போது 10 மணி நேரம் வேல திட்டத்தை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் முடிவை எதிர்த்து ஜூலை 9-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலை யில் இதுகுறித்து இன்னும் ஆழமாக விவாதித்து முடிவுகள் எடுப்பதே நாட்டு நலனுக்கு உகந்ததாக அமையும்.
