அரசு மருத்துவமனையை விரிவுபடுத்தவும் அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளவும் சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

7/11/2024

சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக அரசு மருத்துவமனையை விரிவுபடுத்தவும் அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளவும் பிரசவ வார்டுகளை மேம்படுத்தவும் கோரிக்கையை வைத்து காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகள் அனைத்து வசதிகளும் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், மருத்துவ தேவைக்காக அரசு மருத்துவமனை நாடும் மக்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்க வலியுறுத்தியும், மருத்துவ உபகரணங்களும் நோயாளிகள் படுக்கை அறைகளும் முறையாக கையாளப்பட வேண்டும் எனவும், மருத்துவமனை வளாகத்தில் உணவு கூடம் அமைக்க வேண்டும் எனவும்,

பிரசவகால பெண்களுக்கு ஏற்ற வகையில் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கட்சி நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கையெழுத்து இயக்கமும் இது சார்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *