மனிதன் நல்லவனாக இருந்தால் ஞானத்தை அடைந்து விடுவான்

கோவை, ஜூன் 24 /2025

கோவை பி.எஸ்.ஜி., அற நிலையம் சார்பில், 89வது சொற்பொழிவு நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி அரங்கில் நடந்தது. சிறப்பு சொற்பொழிவாளராக பங்கேற்ற தமிழருவி மணியன், ‘மனம் என்னும் மந்திரச்சாவி’ என்ற தலைப்பில் பேசியதாவது,

மனிதர்களை, 100 சத வீதம் நல்லவர்கள் என்றும், 100 சதவீதம் கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது’ என்கிறார் விவேகானந்தர். அதற்கு காரணம் அவர் களின் மனம் என்கிறார்.

மனிதனின் மனம் நிலை யற்றது. அது ஒவ்வாரு நிமி டமும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால், விவேகானந்தர், ‘மனம் ஒரு குரங்கு,

மனிதன் நல்லவனாக இருந்து விட்டால், ஞானத்தை அடைந்து விடுவான். அலைபாயும் மனம், மனம், நல்லவனாக மாற விடாது. அதனால், யாருக்கும் நிரந் தரமான மகிழ்ச்சி கிடைப் பதில்லை. மனித வாழ்க் கையில், துயரமே அதிகம். இந்த உலகில் எல்லாம் உயிரினங்களும் மகிழ்ச்சியாக உள்ளன.

இங்கு பொன், பொருள், பணத்தை தேடி அலைபவர்க ளாக உள்ளனர். இறுதி மூச்சு இருக்கும் வரை, பணத்தின் மீது இருக்கும் ஆசை தீர்வ தில்லை. விரும்பிய பொருள் கிடைக்கவில்லை என்றால், அதை அடைய தவறான வழியை தேர்வு செய்கின்ற னர். எனவே, மனதை சீர்ப டுத்த வேண்டும். நிலையான மனமே மகிழ்ச்சி தரும். அதற் கான பயிற்சியும், முயற்சியும் வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *