காமராஜர் மக்கள் கட்சி முயற்சியால் பெருந்தலைவர் காமராஜர் வரலாற்று நூலை, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் வாங்குவதற்கு அமைச்சர் இசைவு

20/06/2025

காமராஜர் காட்சியகம் உருவாக்கியுள்ள பெருந்தலைவர் காமராஜர் வரலாற்று நூலை, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் வாங்குவதற்கு அமைச்சர் அவர்கள் இசைவு தெரிவித்துள்ளார்கள்.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில், பெருந்தலைவர் பற்றாளர், புதுச்சேரி அமைச்சர் மாண்புமிகு லட்சுமி நாராயணன் அவர்களை சந்தித்த காமராஜர் மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கதிரவன், விருதுநகர் காமராஜர் காட்சியக நிறுவனர் கணேசன், கள்ளக்குறிச்சி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் சுகுணசங்கர் ஆகியோர் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அமைச்சர் மாண்புமிகு லட்சுமி நாராயணன் அமைச்சர் அவர்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *