தமிழகம் முழுவதும் 38 – மாவட்ட SP அலுவலகத்துக்கு காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துக – தொடர்பான காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மனு

08/06/2025

தமிழ்நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், போக்குவரத்து சந்திப்புகளிலும், கனிமவளக் கடத்தல், போக்குவரத்து விதிமுறை மீறல்கள், திருட்டு வாகனங்கள் என்று பல்வேறு இனங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவைகள் பொதுப் பயன்பாட்டிற்கான இடத்தை ஆக்கிரமிப்பதால், சீரான போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளன; மழையிலும் வெயிலிலும் பராமரிப்பின்றி கிடப்பதால் மீண்டும் பயன்படுத்துவதற்கான தகுதியையும் இழக்கின்றன.

நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை, முறைப்படி ஆவணப்படுத்தி அவற்றை வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாலும், வாகன உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத அல்லது திருப்பி எடுத்துக் கொள்ள விருப்பப்படாத வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்து அல்லது பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் உள்ள வாகனங்களை கழித்துக் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாலும் தேவையற்ற இந்த வாகனக் குவிப்புகளைத் தடுக்கலாம். தங்கள் மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து அவற்றை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் 38 – மாவட்ட SP அலுவலகத்துக்கு Accidents (TN/HOMEEXC/CHN/P/PORTAL/08JUN25/11912136) மனு கொடுக்கப்பட்டுள்ளது .

அதற்கான நடவடிக்கை பதில் தரப் பட்டுள்ளது.

சென்னை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *