ரயில் வரும் நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து இடையூரை ஒழுங்கு படுத்த வேண்டுகிறோம் என்று காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

காரைக்கால் 9/06/2025

அனைத்து மத முக்கிய வழிப்பாட்டு தலங்கள் காரைக்காலை சுற்றி இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை, வாகனப்பெருக்கம் காரைக்காலில் அதிகமாகி இருப்பதால் முக்கிய வீதிகளில் தினம் தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தற்போது திருநள்ளார்பேரளம் வழி இரயில் போக்குவரத்து முறையாக இன்னும் துவங்கப்படாமல் இருந்தாலும் நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது கூட்ஸ் போன்று50பெட்டிகளை இணைத்தார் போல் நீளமான இரயில் செல்கிறது.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் வாகனங்கள் முறையற்ற வகையில் அணிவகுத்து நிற்கிறது ! வெளியூர் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதில் அவசரகால ஊர்தியாக இருந்தாலும் இதே நிலைதான் ! காமராஜர் சாலை, பாரதியார் வீதி. சிங்கார வேலவர் சாலையில் ரயில்வே கேட் மூடப்பட்ட

வேளையில் சாலையின் இரு பக்கமும் எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழி விடாத வரையில் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள் இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து போய் விடுகிறது! அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து சீர் அடைய 30நிமிடங்களுக்கு மேல் ஆகிறது ! அதை தவிர்க்க ரயில் வரும் நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து இடையூரை ஒழுங்கு படுத்த வேண்டுகிறோம் என்று காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *