காரைக்காலில் தீர்க்க முடியாத போக்குவரத்து இடையூறு- “கிரிடம்” வைத்தார் போல் “காரைக்கால்- பேரளம் இரயில் பாதை தொடக்கம்

காரைக்காலில் 1898ம் ஆண்டு மீட்டர் கேஜ் இரயில் பாதை அமைக்கும் போது இரயில் நிலையங்கள் ஊருக்கு வெளியே இருந்தது. கடந்த 125ஆண்டுகளில் காரைக்காலின் வளர்ச்சியால் இரயில் நிலையங்கள் ஊரின் மையப்பகுதிக்கு மாறியது. தற்போது காரைக்கால்-பேரளம் இரயில் பாதையில் அடிக்கடி நிலக்கரி ஏற்றி சரக்கு இரயில் செல்வதால் இரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.

இதனால் காரைக்கால் ஸ்தம்பித்து போகிறது. வாகன பெருக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் கேட் திறந்த பின் போக்குவரத்து சீர் ஆவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அவசர கால ஊர்திகள் செல்லக்கூட வழி இல்லாத நிலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.


போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்போது சுரங்கப்பாதையோ, மேம்பாலமோ அமைக்க முடியாத நிலையில் அதிரடியாக இரயில்வே கேட்டிலிருந்து குறைந்தபட்சம் 50மீட்டருக்கு சாலையை அகலப்படுத்தி இருவழிப்பாதையாக அமைக்க வேண்டும்! பஸ் போக்குவரத்து வழியை மாற்றி அமைக்க வேண்டும், இதனால் 50%சதவீத போக்குவரத்து இடையூறு குறையும்.

மேலும் பள்ளி நேரங்களில் சரக்கு இரயில் செல்வதால் மாணவ மாணவியர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இரயில் நிர்வாக அதிகாரிகளுடன் பேசி பள்ளி நேரத்தில் செல்லும் சரக்கு இரயில் நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி சார்பாக வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *