2.0 திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்க காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
19/06/2025
கடந்த 2024 மார்ச் மாதம் பாரத பிரதமர் நரேந்ர மோடி அவர்கள் ஸ்ரீநகரில் 6400 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்தார். அதில் சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் காரைக்கால் கடற்கரையில் உணவு மண்டலம், செயற்கை மேற்பரப்பு பகுதி, பாதைகள், நிலப்பரப்பு, வாகனம் நிறுத்தும் இடம், குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த 20.3 கோடி ரூபாய் வழங்கினார்.

இதை ஆளுநர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் வரவேற்றனர், இரண்டு ஆண்டுகளில் இப்பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஓர் ஆண்டு முடிந்த நிலையில் இதுவரை இத்திட்டத்தின் மூலம் முடிந்த பணிகள் என்ன என்ன என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டுகிறோம்.23-ஏக்கரில் கடற்கரையை ஒட்டி உள்ள அலையாத்தி காடுகளில் ஓசோன் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களை உருவாக்குவது , நடைப்பாதையில் உள்ள இருக்கைகள் அனைத்தும் இடிந்தும்,சிதிலமடைந்துகிடக்கிறது.
பொதுப்பணி துறை நடைப்பாதையை ஆக்கிரமித்து குடோனாக பயன்படுத்துகிறது. கட்டண கழிப்பிடம் பூட்டி கிடக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலப்பகுதி இரவு நேரத்தில் வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதுக்காப்பற்ற நிலையில் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் சுதேஷ் தர்ஷன் 2.0திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்க காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.


