குற்றவாளி தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்

2/06/2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு விசாரணை நீதிமன்றம் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருப்பதை காமராஜர் மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்தத் தண்டனையை, குற்றவாளி முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

தலைவர்கள் பிறந்த நாள், நன்னடத்தை போன்ற காரணங்களைக் காட்டி, குற்றவாளியை முன்னரே விடுவிக்கும் நிலைமை ஏற்படக் கூடாது. மேல்முறையீடுகளில், குற்றவாளி தப்பி விடாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும். இந்த குற்ற சம்பவத்தில் எழுப்பப்பட்டுள்ள பல்வேறு ஐயங்களையும் முற்றாகக் களைய வேண்டும் என்றும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

திருமதி வள்ளி ரமேஷ்,
தலைவர் – காமராஜர் மக்கள் கட்சி மகளிர் அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *