காமராஜர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திரு பொன்.கோவிந்தராஜ் அவர்கள் தொண்டர்கள் முன் உரை

மதுரையில் 16/7/2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழாவில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள், தொண்டர்கள் முன்னிலையில் காமராஜர் மக்கள் கட்சியின் பொருளாளர் உரையாற்றும் பொழுது “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை,பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்று மேற்கோள் காட்டி, கட்சியின் செயல்பாடுகளுக்கு அடிப்படையில் பொருளாதாரம் தேவை எனவும், பொருளாதாரத்தை பெருக்குவதற்கும் அடுத்த கட்ட நகர்வுக்களுக்கான பணிகளை செய்ய தொண்டர்கள் கட்சிக்கு பொருள் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். மேலும் காமராஜர் ஆட்சியின் சிறப்புகளை பட்டி தொட்டி எங்கும் பரவ வேண்டும் எனவும்,படிக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம் காமராஜர் ஆட்சியின் சிறப்பு மலர் சென்றடைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இடம் : காமராஜர் ஆட்சி சாதனை மலர் , வெளியீட்டு விழா , திருநகர் மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *