காமராஜர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக நலத்திட்ட உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட கிளாக்குளம் கிராமத்தில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவியானது, காமராஜர் மக்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.

காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன், ஒன்றிய கவுன்சிலர் காந்திமதி ஆகியோர் நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி, நம்பிராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *