காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் கோடை கால நீர் மோர் வழங்கும் விழா

30/04/2024 ; செவ்வாய்

காலச் சூழல் மாற்றங்களின் காரணமாக, நாளுக்கு நாள் கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர்ப் பந்தல் ஒன்றை எளிமையான முறையில் அமைத்து தங்கள் பகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனை பெயரில் அறிக்கை பொதுச்செயலாளர் வெளியிட்டு இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்ட மாநகரத் தலைவர் திரு.கருப்புசாமி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு.சுரேஷ்குமார் தெற்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு.ராஜேந்திரன்,வடக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் திரு.வெள்ளிங்கிரி, ஆகியோர் தலைமையில் திருப்பூர் பகுதி மக்களுக்கு நீர் மோர் வழங்கும் விழா இன்று காலை 11:30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.

நீர்மோர் உடன் சேர்த்து, கோடை வெயிலை தவிர்க்கும் வகையில் குளிர்ச்சியான தர்ப்பூசணி போன்ற பல வகைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நீர் மோர் விழா பந்தலை திறந்து வைத்தவர் டைம்ஸ் டையிங் உரிமையாளர் திரு.விஜயகுமார், நிகழ்வை தொடங்கி வைத்தவர் பாரத் ட்ரேடர்ஸ் உரிமையாளர் திரு.மோகன்ராம். இந்த விழாவில் கட்சியின் தொண்டர்கள் திரு.சேகர், திரு.சக்திவேல் ,திரு.சுதாகர், திரு.கணேஷ் ,திரு.லட்சுமண பெருமாள், திரு.நவீன் திரளாக கலந்து கொண்டனர்.

நன்றி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் காமராஜர் மக்கள் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *