ஈரோடு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல்

காமராஜர் மக்கள் கட்சி தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தல் அமைத்து கட்சி நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக நமது ஈரோடு மாவட்ட செயலாளர் திரு.எஸ் ஆர் வேலுசாமி அவர்கள் ஏற்பாட்டில் சத்தியமங்கலத்தில் நீர் மோர் பந்தல் பொதுமக்களின் நலனுக்காக திறக்கப்பட்டது.

இதில் ஈரோடு மாவட்ட நமது காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி. காமராஜர் மக்கள் கட்சி ,ஈரோடு மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *