காமராஜர் மக்கள் கட்சியில் தலைமை அலுவலகத்தில் கோடைகால நீர்மோர் வழங்குதல்

9/05/2024;

கோடைகால வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்குதல் என்று தலைமையில் தீர்மானித்து ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தொடர்ந்து இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று 9.4.2024 செவ்வாய் கிழமை காலை 11:30 மணி அளவில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி மக்கள் பணி செய்தனர்

இதில் மாநில பொதுச் செயலாளர் திரு பா. குமரய்யா, தென்சென்னை மாவட்ட தலைவர் திரு .வாசு மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு .ரவிச்சந்திரன் மாநில செயலாளர் திரு .பாரி கட்சி தலைமை நிலைய செயலாளர் திரு .கோடீஸ்வரன் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு.ராஜா திரு.தயாளன் மற்றும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி என, கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நன்றி, காமராஜர் மக்கள் கட்சி ,சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *