காமராஜர் மக்கள் கட்சி சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் பெரம்பூர் பகுதிகளிலும் நீர் மோர் வழங்கும் பணி

14/05/2024

கோடைகால வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலம் முடியும் வரை நீர்மோர் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருப்பூர், காஞ்சிபுரம், ஈரோடு, சிவகங்கை என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நீர் மோர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் காமராஜர் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி வருகின்றனர்.

சென்னை பெரம்பூரில் நீர் மோர் ஏற்பாடு செய்து மக்களுக்கு வழங்கிய திருமதி மீனா, திருமதி ராதிகா, திரு பாரி

திருவண்ணாமலை மாவட்ட தலைவர் திரு.அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *