சாலையில் தேங்கும் மழை நீர்,குடியிருக்கும் வீடுகளுக்குள் செல்லாதபடி தடுக்க காமராஜர் மக்கள் கட்சி சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 129 பகுதிகளில் மழைநீர் பாதாள சாக்கடைக்குள் செல்லாமல் சாலைகளில் தங்கி விடுகிறது. மழைக்காலங்களிலும் மட்டுமல்லாமல் சாதாரண நிலையிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது .

இதனால் போக்குவரத்திற்கு அதிக பாதிப்பும் அருகில் வசிக்கும் வீடுகளுக்கும் நீர் வருவதால் சுப்பிரமணி தெரு, கட்டபொம்மன் தெரு, சி ஆர் ஆர் புரம் கன்பத் ராஜ் பகுதிகளில் மிகச் சிரமமாக உள்ளது.

இதை கவனத்தில் கொண்டு காமராஜர் மக்கள் கட்சி சென்னை மாநகராட்சிக்கு மனுக்களாக இந்தப் பகுதி நிலையை தெரியப்படுத்தி இதற்கான தீர்வு நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நன்றி, காமராஜர் மக்கள் கட்சி, தகவல் தொழில்நுட்ப அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *