தமிழக அரசை கண்டித்து விருதுநகர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

21/06/2024,

தமிழ்நாட்டில் கடும் விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, வீட்டு சொத்து வரி உயர்வு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியர்கள் கல்விக் கடனை உடனே ரத்து செய்யவும் நடவடிக்கை எடு என கோரிக்கை விடுத்தும்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு, நிதி வழங்கிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியும்,

சிவகாசி மாநகராட்சியில் பல கோடி ரூபாய் லஞ்சமும் ஊழலும் நடைபெற்று உள்ளது. ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மேல் உடனே நடவடிக்கை எடு என கோரிக்கை விடுத்தும்,

சிவகாசியில் தமிழகஅரசு இலவசபாடப்புத்தகத்தை கடத்தல், போதைப் பொருட்கள் கடத்தல், விபச்சாரம் ரவுடிகளின் அட்டூழியம், விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறையினர் மீது பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடு என கோரிக்கை விடுத்தும், தமிழக அரசை கண்டித்து காமராஜர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இப்படிக்கு

இரா.கோபி, மாவட்ட தலைவர் ,காமராஜர் மக்கள் கட்சி, விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *