வியூக வகுப்பாளரை நம்பாமல் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள விஜய் முன்வர வேண்டும் தலைவர் தமிழருவி மணியன்
3/03/2025
வியூக வகுப்பாளரை நம்பாமல் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் சி.பி.எஸ்.இ., தரத்திலான கல்வி, ஏழை குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடத்துவோர், திராவிட மொழிகளில் ஒன்றையா வது 3வது மொழியாக பயிற்றுவிக்கலாம்.
இரு மொழிக் கொள்கையில் தவறில்லை. மாநிலங்களில்
தாய் மொழியை தவிர்க்க முடி யாது. தமிழே படிக்காமல் பட்ட தாரியாக முடியும் என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்திருக்கிறது.
மாநில பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றியவர் முன்னாள் பிரதமர் இந்திரா. கல்வி மாநில பட்டியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை நீக்கி இருக்க முடியும். 14 ஆண்டு காலம் மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்த தி.மு.க., அதற்கு ஏன் முயற்சிக்க வில்லை.
தொகுதி மறு சீரமைப்பு ஆலோசை கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப் பட்ட கட்சிகள் மட்டுமின்றி பதிவு செய்யப் கட்சிகளையும் பட்ட அழைத்தனர். நடிகர் கமலுக்காகவே இந்த மாற்றத்தை தி.மு.க., செய்தி ருக்கிறது.
தமிழருவி மணியன்
தமிழகத்தில் கனிமவள கொள்ளை உட்பட ஊழலில் திளைத்த கட்சியாக உள்ளது. வியூக வகுப்பாளரை நம்பி அரசியல் செய்வதை தவிர்த்து மக்களை சந்தித்து உணர்வுகளை புரிந்து கொள்ள விஜய் முன்வர வேண்டும்.
– தினமலர்
