ஆபாசக் களஞ்சியமான அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்க!
11/04/25
அமைச்சர் பொன்மொழியின் ஆபாசப் பேச்சு, திராவிட முன்னேற்றக் கழக இரண்டாம் தர பேச்சாளர்களின் நரகல் நடையில் அமைந்திருப்பது நமக்கு பெரும் அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பெண் மக்களை இழிவு படுத்திப் பேசுவது என்பது இவர்களது பிறவிக் குணம்.
அவரைத் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் போதாது; அமைச்சர் பொறுப்பு வகிப்பதற்கும் அருகதை அற்றவர் பொன்முடி. இவரை உடனடியாக முதல்வர் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் அல்லது ஆளுநர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி
