காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் பேச்சு

6/04/2025

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, உட் கட்சி பூசல்களை களைய வேண்டும். செங்கோட்டையன், நான் அறிந்தவரையில் மிக நல்ல மனிதர். எந்த நிலையிலும் பிரச்னையை உரு வாக்கிக் கொள்ளாத மனிதர்.

கட்சியில் இருக்கக் கூடியவர்களில், பழனிசாமியை விட சீனியர். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவருக்கு கீழே கல்வி அமைச்சராக இருந்தார்.

செங்கோட்டையனை பழனிசாமி அழைத்து மனம் விட்டுப் பேச வேண்டும். இரண்டு பேரும் ஒரே கட்சிதான். இரண்டு பேருக்கும் தலைவர் எம்.ஜி.ஆர்., தான், தலைவி ஜெயலலிதா தான். இருவருக்கும் இரட்டை இலை தான்.

நன்றி தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *