காரைக்காலில் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்: அரசு நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

காரைக்கால், 3/04/2025


காரைக்கால் நகர் பகுதியான லெமேர் வீதி கழிவுநீர் கால்வாயில், தொற்று நோய் பரப்பும் புழு மற்றும் பெருக்கத்தால் பொதுமக்கள் அவதி. உடனடி நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் இஸ்மாயில் இது குறித்து நேற்று திருபர்களிடம் கூறியதாவது காரைக்கால் நகர் பகுதியில் ஒன்றான லெமேர் வீதி கடைசி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், தொற்று நோய் பரப்பும் புழு மற்றும் கொசுக்கள் மிக அதிக அளவில் காணப்படுகிறது.

அதோடு கோழி இறைச்சிகளின் கழிவுகள் அதிகமஈக காணப்படுவதால் கொசுக்கள் உற்பத்தி மிக வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து ஏற்கனவே புகைப்படம் எடுத்து நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பியும் இதுவரை
யாகும் நடவடிக்கை எடுக்கவில்லை.

குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட புகார் இடத்தை ஆய்வுகூட செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் கொசுக்கடியால் அவதியுற்று அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதை இப்படியே விட்டால், மலேரியா, டெங்க, சிக்கன்குனியா நோய்களை மிக வேகமாக அப்பகுதியில் பரவக்கூடும்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக ஆய்வு செய்து கழிவு நீர் கால்வாயை தூய்மைப்படுத்த வேண்டும். இல்லையேல் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *