நினைவின் நிழல்கள் கவிதை நூல் காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவிமணியன் முன்னிலையில் கவிஞர் முத்துலிங்கம் வெளியீடு
26/04/2025
ரௌத்திரம் இலக்கிய வட்டம் இவ்விழாவை 26.04.25 அன்று மாலை சென்னை விருகம்பாக்கம் காமராசர் மக்கள் கட்சி அலுவலகத்தில் நடத்தியது.கவிதை நூல் குறித்து தமிழருவி மணியன் ஆய்வுரை வழங்க கவிஞர் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்களும் நானும் வாழ்த்துரை வழங்கினார்.தன்னுடைய ஆய்வுரையில் ந.வாசுகி அவர்கள் எழுதிய குறுங்கவிதைகளின் சிறப்புகள் குறித்து அழகாகப் பேசிய தமிழருவி மணியன் அவர்கள் என்னுடைய ‘#மீன்கள்உறங்கும்குளம்’ ‘#எண்ணும்_எழுத்தும்’ ஆகிய கவிதைத் தொகுதிகளில் உள்ள குறுங்கவிதைகளை மேற்கோள்களாக எடுத்துரைத்து விளக்கியது பெருமிதம் தருவதாக அமைந்தது.

பிருந்தா சாரதி கவிதைக்கு அவர் கூறும் விளக்கங்களைக் கேட்கும் போது ஒரு கவிதையை எப்படி எல்லாம் காண முடியும், காணவேண்டும் என்பதை நாம் உணரமுடிகிறது.நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கும்பகோணத்தில் ஜனதா கட்சி கூட்டம் ஒன்றுக்காக வந்திருந்த தமிழருவி மணியன் அவர்களின் உரையை கேட்டு வியந்திருக்கிறேன். அவரோடு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதும் அவரது உரையில் என் கவிதைகள் இடம் பெறுவதும் என்னைத் திக்கு முக்காட செய்து விட்டன. அவருடைய அன்பிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. காமராஜர் மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் குமரய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.