நெஞ்சு பொறுக்குதில்லையே…!

12/04/25

ஏளனப் பேச்சும், ஏக வசனமும், ஓசி, ஓசி என்று ஏசியதற்கும், சொந்த மண்ணிலேயே சேற்றை வாரி அடித்தனரே! சேற்றில் அடித்தது பத்தாது, செருப்பால் அடிக்க வேண்டும் என்றா இந்தப் பேச்சு பேசுகிறாய் ?

சபை நாகரிகம், கூச்சநாச்சம், பொது வாழ்க்கையில் இருக்கின்றோம் என்ற பொறுப்புணர்வு, இப்படி எல்லாம் மறந்து வக்கிர எண்ணத்துடன் நீங்கள் பேசியது சமூக சீர்திருத்தமா?
பயனுள்ள சிந்தனையா ?உங்கள் மனதில் எவ்வளவு வன்மம் இருந்தால் இந்த வார்த்தைகளை நீங்கள் கக்கி இருப்பீர்கள்!

உங்கள் வீட்டிலும் பெண்கள் உள்ளார்கள் தானே!

இந்த உரையை அவர்கள் கேட்க மாட்டார்களா?


பூமாரி பொழிவார்களா ?மானங்கெட்ட மந்திரியே!
மரியாதையாகப் பதவி விலகு! மங்கையர் சாபத்திற்கு
ஆளாகாதே!

திமுக மேடைகளில் இதுபோன்ற ஆபாசப் பேச்சாளர்கள் அதிகரித்து விட்டனர். பொதுமேடை போட்டு இப்படிப் பொன்முடி பேசியதற்கு, பொதுமக்களே கொந்தளித்து எழுங்கள்!

வீரமங்கையரே! வீறு கொண்டு எழுங்கள்.
தரம் குறைந்த பேச்சுக்கள் இனி தமிழகத்தில் ஒலிக்கக் கூடாது!

மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!
மகளிர் இடத்தில் மன்னிப்பு கேள்!

பதவி விலகு!
பதவி விலகு!
ஆளும் தகுதி உனக்கு இல்லை!
ஆபாசப் பேச்சே நீங்கள் அறிந்த கலை!

தகுதியில்லை, தகுதியில்லை!
சட்டமன்றம் செல்ல உனக்குத் தகுதி இல்லை!

வாக்கு கேட்டு வரும் போது சைவம், வைணவம் என்று பார்ப்பதில்லை. எல்லோர் காலிலும் விழுகிரீர்கள்! பதவிக்கு வந்ததும் ஆணவத்தால் ஆடுகிறீர்கள்!

முதல்வர் ஸ்டாலின் அவர்களே! பொன்முடியை அமைச்சரவையில் இருந்தது நீக்குங்கள்!

திருமதி வள்ளி ரமேஷ்,மாநில மகளிர் அணித் தலைவர்,
காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *