மாவட்ட நிர்வாகம் சாலைகளில் கொட்டப்பட்ட மண்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
காரைக்கால் 17/4/2025
புதுத்துறை உதயம் கார்டன் எதிரில் உள்ள வாய்க்காலில் பாலம் கட்டும் போது தோண்டப்பட்ட களிமண் இது நாள் வரை அப்புறப்படுத்தாமல் பாதி சாலைவரை கிடைக்கிறது.இதனால் தொடர்ந்து செல்லும் பள்ளிவாகனங்களுக்கும் மற்ற வாகனங்களுக்கும் இடையூறாக உள்ளது.
இரவு நேரங்களில் இருளில் மண்மேடு இருப்பது தெரியாமல் விபத்தும் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அம்மண்மேடுகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.


