காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆபத்தான நிலையில் பசுமை பந்தல்

2/05/2025

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பொதுப்பணித்துறையினர் சாலையில் உள்ள மரங்களை வெட்டி தார் சாலைகள் அமைத்து வருகின்றனர்.. நாளடைவில் வெப்ப மண்டலம் பாதிக்கப்பட்டு அதிகமான வெப்பநிலை ஏற்பட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது மரங்களை வளர்க்காமல் பொதுப்பணித்துறை ஆங்காங்கே நிழல் கூடைகளை அமைத்து வருகிறது அமைத்து வரும் நிலை குடல்கள் கூடைகள் சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அமைக்கப்பட்டு மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் விளைவாக அமைந்துள்ளது.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுப்பணி துறை சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இரும்பு தூண்கள் தார்சாலையிலேயே உள்ளது. இரவு நேரத்தில் எதிரே வரும் வாகன விளக்குகளின் ஒளியில் தூண் இருப்பது தெரிவதில்லை. அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே அத்தூண்களில் ஒளி பிரதிபலிப்பு பேப்பர்கள் ஒட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *