காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி வழியில் கைப்பிடி சுவர் அமைக்க வேண்டுகோள்
2/05/2025
காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி சுற்றுசு வரும் வழியும் புதுப்பிக்கப்பட்டது.முன்பு மையவாடியின் இருபுறமும் பெரியோர்கள் கைப்பிடித்து நடந்து செல்வதற்கு வசதியாக சில்வர் கைப்பிடி இருந்தது. தற்போது கைப்பிடி இல்லாத காரணத்தால் அவ்வழியே நடந்து செல்லும் பெரியோர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.அவ்வழியில் மீண்டும் “கைப்பிடி” அமைக்க வக்ஃபு நிர்வாக சபை நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.
