கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல்
1/05/2025
கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளது இதன் முதல் நிகழ்வாக திருவண்ணாமலை செஞ்சி நெடுஞ்சாலையில் காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணி தலைவர் திரு சுரேஷ் அவர்களின் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.




விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி, திருவண்ணாமலை சாலையில்,காமராஜர் மக்கள் கட்சியின் நீர் மோர்ப் பந்தல் செங்கல்பட்டு மாவட்ட பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள் ஒருங்கிணைப்பில் துவக்கப்பட்டது.இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் பா குமரய்யா, மாநிலச் செயலாளர் ஜெயகாந்தன், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.